தமிழ்நாடு பத்மசாலியர் சங்க தேர்தல் அறிவிப்பு

பதிவேற்றிய தேதி & நேரம்: 26/12/2025 02.00am
ஏதேனும் எழுத்து திருத்தங்கள் இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்.

அன்பார்ந்த பத்மசாலிய சொந்தங்களே, அனைவருக்கும் வணக்கம்.

தங்களில் பெரும்பான்மை சொந்தங்களுக்கு 2026-2029 ஆண்டுக்கான மாநில சங்க தேர்தல் நடைபெற உள்ளது என்பதை அறிந்து இருப்பீர்கள்.

கடந்த 09-11-2025-ந் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு பத்மசாலியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் இணை ஆணையர்களாக எங்களை நியமித்ததை தொடர்ந்து, நாங்கள் பிரதி மாவட்டமும் ஒரு தேர்தல் அதிகாரியை வழங்கிட /பரிந்துரைத்திடவும் கேட்டிருந்தோம்.

உறவுகளே, தங்கள் கிளை மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு வரும் தேர்தல் அதிகாரிகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பு அளிக்க இதன் மூலம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

முதல் கட்டமாக கிளைச் சங்கத்திலும் அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மாவட்டத்திலும் தேர்தல்கள் நடைபெற உள்ளது. மூன்றாம் கட்டமாக அதாவது இறுதியாக மாநில தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் பற்றிய விரிவான விவரங்கள் மற்றும் தேர்தல் குறித்த பொதுவான சந்தேகங்கள் அதில் முடிந்தவரையில் தங்களுக்கு புரியும் வகையில் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநில சங்கத் தலைவர் தேர்தல் முடிந்த உடன், உடனே பதவி பிரமாணமும் செய்து வைக்கப்படும்.

தேர்தல் அட்டவனை
கிளை சங்கங்கள்
04 ஜனவரி 2026
மாவட்ட சங்கங்கள்
25 ஜனவரி 2026
மாநில சங்கம்
01 மார்ச் 2026

அதன் விவரத்தை கீழே கேள்வி- பதில் என்ற முறையில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபேசி பயன்படுத்துபவர்கள், பதிலை அறிய கேள்வி வரியை திரையில் தொடவும்.

கிளை சம்பந்தமாக...
மாவட்டம் சம்பந்தமாக...
மாவட்டத் தேர்தல் அட்டவணையைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தேர்தல் அதிகாரிகளின் விவரங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

பதில்: தாங்கள் சார்ந்துள்ள மாவட்ட சங்கங்களில் விருப்பம் மனு பெற்று நிர்வாக உறுப்பினர் ஆகி தங்களின் பங்களிப்பினை வழங்கலாம். (கிளை சங்கங்கள் கொண்ட மாவட்ட சங்கம் நீங்கலாக)

பதில்: தாங்கள் சார்ந்துள்ள மாவட்ட சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் அனைவருமே தகுதி பெற்றவர்கள் ஆவார்.

பதில்: தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற அனைவருமே.

பதில்: ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால் தேர்வு நடைமுறை செயல்படுத்தப்படும், மேலும் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடத்தப்படும். ஒருவர் மட்டுமே விண்ணப்பம் செய்திருந்தால், போட்டியின்றி ஏகமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்படும்.

பதில்: விண்ணப்ப படிவம் 28-12-2025 முதல் 04-01-2026 வரை வழங்கப்படும். வேட்பாளர் விண்ணப்ப படிவத்தை பெற்றவுடன் அன்றே பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

பொதுவான அலுவலக நேரங்களில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். வேட்பாளரின் விண்ணப்ப படிவம் வழங்கலும், தாக்கலும் அந்தந்த மாவட்ட சங்க அலுவலகத்தில் நேரில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம் அந்தந்த மாவட்ட சங்கத்தின் முடிவுக்குட்பட்டது.

பதில்: பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை உள்ளூர் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனை அவர் அந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் பரிசீலனைக்கு சமர்ப்பிப்பார்.

பதில்: எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. வேட்பாளர் நேரில் வந்து கொடுக்க வேண்டும். தாக்கல் செய்யும் நாள் அன்று முன்மொழிபவரும், வழிமொழிபவரும் வேட்பாளருடன் வர வேண்டும்.

பதில்: தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக உறுப்பினர்களில் இருந்துதான் முன்மொழிபவரும் வழிமொழிபவரும் இருக்கவேண்டும்.

பதில்: 11-01-2026 அன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து 11.00 மணிக்குள் பரிசீலனையும், அதனைத் தொடர்ந்து அன்றே 12.00 மணி முதல் 12.59 வரை திரும்பப் பெறுதல் நிகழ்வுகளும் நடத்தப்பட்டு நிறைவு பெறும். 18-01-2026 அன்று இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

பதில்: சங்க சட்ட விதிகளின்படி 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு தேர்தல் நடைபெறும். வருகின்ற 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அந்தந்த மாவட்ட சங்க அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

பதில்: 100% வாக்குப்பதிவு அவசியம் என்பதால், தவறாமல் வந்து வாக்களிப்பது உங்கள் தலையாய கடமை என கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். வர இயலாத நிலை ஏற்பட்டால், மாநில தேர்தல் ஆணையரையோ அல்லது தேர்தல் இணை ஆணையரையோ தொடர்பு கொள்ளவும்.

பதில்: தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களை, நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி விருப்ப மனு பட்டியல் அடிப்படையில் அடையாளம் காண்பார்.
மாநிலம் சம்பந்தமாக...

2026-2029 வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

பதில்: பட்டியல்கள் வந்துள்ள 19 மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள் ஆன 7 பேர் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவர். அதாவது 7 நபர்கள் x 19 மாவட்டங்கள் = 133 வாக்காளர்கள். இவர்கள் அனைவரும் தலா ரூ. 1000/- உறுப்பினர் சந்தா செலுத்த வேண்டும்.

பதில்: வாக்களிக்கும் உரிமை பெற்ற அனைவரும் போட்டியிட தகுதி பெற்றவர்களே.

பதில்: ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால் தேர்வு நடைமுறை செயல்படுத்தப்படும், மேலும் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடத்தப்படும். ஒருவர் மட்டுமே விண்ணப்பம் செய்திருந்தால், போட்டியின்றி ஏகமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்படும்.

பதில்: விண்ணப்ப படிவம் 07-02-2026 முதல் 09-02-2026 வரை 3 நாட்களுக்கு வழங்கப்படும். வேட்பாளர் விண்ணப்ப படிவத்தை பெற்றவுடன் அன்றே பூர்த்தி செய்து, வைப்புத் தொகை ரூ. 10,000/- த்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

07-ந் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரையும், 08-ந் தேதி பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் மற்றும் 09-ந் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரையும் விண்ணப்ப படிவம் வழங்கப்படும்.

வேட்பாளரின் விண்ணப்ப படிவம் வழங்கலும், தாக்கலும் தமிழ்நாடு பத்மசாலியர் சங்கத்தின் பதிவு பெற்ற அலுவலகமான சென்னை - 600 028, மந்தைவெளி, 35/16, வி.சி. கார்டன் முதல் தெருவில் நடைபெறும்.

பதில்: பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாநில சங்கத்தில், மாநில தேர்தல் ஆணையர் முனைவர் திரு. M. கிருஷ்ணன் அல்லது மாநில தேர்தல் இணை ஆணையர் திரு P. வெங்கடசுப்ரமணியன் ஆகியோரிடம் கொடுக்க வேண்டும். சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி கடிதம் பெற்றுக் கொள்ளவும்.

பதில்: எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. வேட்பாளர் நேரில் வந்து கொடுக்க வேண்டும். தாக்கல் செய்யும் நாள் அன்று முன்மொழிபவரும், வழிமொழிபவரும் வேட்பாளருடன் வர வேண்டும்.

பதில்: வாக்கு உரிமை பெற்ற வாக்காளர்களில் இருந்துதான் முன்மொழிபவரும் வழிமொழிபவரும் வரவேண்டும்.

பதில்: 10-02-2026 அன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து 11.00 மணிக்குள் பரிசீலனையும், அதனைத் தொடர்ந்து திரும்பப் பெறுதல் நிகழ்வுகளும் நடத்தப்பட்டு நிறைவு பெறும். அன்றைய தினமே மாலை 5.00 மணிக்குள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

பதில்: சங்க சட்ட விதிகளின்படி 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு தேர்தல் நடைபெறும். வருகின்ற 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி, ஸ்ரீரங்கம், கீழ அடையவளஞ்சான் தெருவில் அமைந்துள்ள பத்மசாலியர் ஸ்ரீ ராமானுஜர் கூடத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

பதில்: 100% வாக்குப்பதிவு அவசியம் என்பதால், தவறாமல் வந்து வாக்களிப்பது உங்கள் தலையாய கடமை என கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். வர இயலாத நிலை ஏற்பட்டால், மாநில தேர்தல் ஆணையரையோ அல்லது தேர்தல் இணை ஆணையரையோ தொடர்பு கொள்ளவும்.

பதில்: வாக்காளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் ஆணையர்களால் வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டை மட்டுமே வழங்கப்படும்.

பதில்: தமிழ்நாடு பத்மசாலியர் சங்கத்தின் மாநில சங்க அலுவலகத்திலும், நமது சங்கத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் www.tnpss.org என்ற வலைதளத்திலும் 07-02-2026 அன்று வெளியிடப்படும்.

👉 2026-2029 வாக்காளர் பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், தேர்தல் ஆணையர்களை தொடர்பு கொண்டு
சந்தேகத்தினை நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.

தேர்தல் தேதி அறிவிப்பு நாள்: 08-12-2025

அவ்வண்ணமே,

ஒப்பம்
ப. வெங்கடசுப்ரமணியன்
மாநில தேர்தல் இணை ஆணையர்
தமிழ்நாடு பத்மசாலியர் சங்கம்
இப்படிக்கு,

ஒப்பம்
முனைவர் எம். கிருஷ்ணன்
மாநில தேர்தல் ஆணையர்
தமிழ்நாடு பத்மசாலியர் சங்கம்
மாநில தேர்தல் ஆணையர்
முனைவர் திரு. எம். கிருஷ்ணன்
மாநில தேர்தல் இணை ஆணையர்
திரு. ப. வெங்கடசுப்ரமணியன்
Total Visitors

1180

Today’s Visitors

2

Your Country

United States